Skip to main content

தொழிளாளர்களின் வாழ்வியலை மீட்கக் கோரி ஏ.ஐ.டி.யு.சி. நாடு முழுக்க ஆர்பாட்டம்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
erode - aiutuc



ஊரடங்கு என்ற பொது முடக்கத்தால் உருக்குலைந்துபோன ஏழைகள், கூலி தொழிலாளர்களின் வாழ்வை மீட்டெடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான  ஏ.ஐ.டி.யு.சி. இன்று இந்திய நாடு முழுமையாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
 

ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி, சங்க தலைவர் சின்னசாமி தலைமையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது.
 

அவர்களின் கோரிக்கைகள் வருமாறு:,
 

1.அன்றாடம் உழைத்து, ஊதியம் ஈட்டி அதன்மூலம் வாழ்க்கை நடத்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், உணவுப் பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுத்து முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!
 

2)பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்!
 

3)கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி, உணவுப்பொருட்களை விரைவில் வழங்கிடவும்,
 

4)நலவாரிய அட்டையை புதுப்பிக்கவில்லை என்று காரணம் கூறி பதிவு செய்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும்  அதிகமானவர்களுக்கு   நிதி வழங்க மறுக்காதீர் எனவும்,
 

5)ஓய்வூதியர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியும் உணவுப்பொருட்களும் உடனே  வழங்கிடுக எனவும்,
 

6)  நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களை நடத்தி,  நிவாரணநிதியும் உணவுப்பொருட்களும் சரியாகச் சென்று சேர்வதற்கான வழிவகைகளைத் தீர்மானித்து செயல்படுத்த வேண்டும்.
 

7) மத்திய மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி, நிரந்தர, கேஷுவல், கான்ட்ராக்ட்  தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழுச் சம்பளம் வழங்கச் செய்திடுக,
 

8) வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.
 

9) பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற, நிலுவை தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை கைவிட வேண்டும்.
 

10) புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் திரும்ப, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகளை, கட்டணம் வசூலிக்காமல் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும்,
 

11) கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, உயிரை பணயம் வைத்து பணி புரிந்த மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் எனவும்,
 

12) அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரைவில் வழங்கிட கோரியும்,
 

13) நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை  வழங்கு! அந்த ஊதியத்தையும் குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்து, இந்த பணியாளர்களுக்கு அரசு மரியாதை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 

14) ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி  உள்ளிட்ட திட்ட ஊழியர்களுக்கு 'தொழிலாளர்' தகுதி வழங்கி, குறைந்தபட்சம் மாதம்18,000 ரூபாய் சம்பளம் அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
 

என இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சத்தியமங்கலம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் என இந்தியா முழுக்க ஏஐடியுசி தொழிற்சங்கத்தில் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.