Skip to main content

ஈரோடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி!

Published on 16/04/2018 | Edited on 16/04/2018
family


ஈரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது தம்பி கார்த்தி. இவர்களின் பெரியப்பா மகன் ஆ.செந்தில்குமார் இவர்களுக்கு பூர்வீக சொத்து ஈரோடு பிருந்தா வீதியில் உள்ளது. பிரகாஷிக்கும் ஆ.செந்தில்குமாருக்கும் சொத்து பிரச்சனை உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது.
 

family 1


இந்நிலையில் 8 கோடி மதிப்புள்ள சொத்தை செந்தில்குமாரே அபகரித்து வைத்துள்ளதாக அவரது சித்தப்பா மகனான பிரகாஷ் தனது மனைவி, தாயார், குழந்தை தம்பி, அவரது மனைவி என 6 பேருடன் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து திடீரென தீக்குளிக்க முயன்றனர். இச்சம்பவத்தை தடுத்த போலீசார் பிரகாஷ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
 

family 3


இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் புகார் கூறிய ஆ.செந்தில்குமார் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்