Skip to main content

ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய  ஆட்சியர் உத்தரவு

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
er

 

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டு, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


 ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் ஜனவரி 1ந் தேதி  முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் பினாஸ்டிக் ஒழிப்பு  நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர் தி சி.கதிரவன் ஈடுபட்டு வருகிறார்.

 
இன்று  சென்னிமலை பேரூராட்சி, சென்னிமலை முருகன் கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார். மேலும் மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு துணிப்பை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும் சோதனைச் சாவடி அலுவலர்கள் அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பூக்கடைகளிலும், அப்பாய் செட்டி வீதி பகுதியில் இருந்த இறைச்சி கடைகள், காங்கேயம் ரோடு மேற்கு பகுதியில் இருந்த சுமார் 50 கடைகளில் இருந்து 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தார் மேலும் அரசு அதிகாரிகள்  தினந்தோறும்  வனிக நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற அவர் கடை உரிமையாளார்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸப்டிக் பொருள்கள் வைத்திருந்தால்  அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனையாளரை கண்டறிந்து பேரூராட்சிப் பகுதிக்குள் நுழையாத வண்ணம் கண்காணிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதே போல், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கொங்கலம்மன் கோயில் வீதி மற்றும் ஈரோடு இரயில் நிலையங்களில் செயல்படும் சுமார் 35-க்கும் மேற்பட்ட கடைகளில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு  திடீர் சோதனை மேற்கொண்டதில், சுமார் 15 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.  இனி வருங்காலங்களில் இதேபோன்று தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பைகள் பிளாஸ்டிக் மெருகூட்டப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட கேக் பக்கம், தெர்மகோல்  உபயோகப்படுத்தக்கூடாது என்று வணிகர்களிடம் அதிகாரிகள் கூறினார்கள். மேலும் உணவு வணிகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.