Skip to main content

ஈரோட்டில் இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுப்பு...

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 

ஈரோடு வ.ஊ.சி பூங்காவில் உள்ள  விளையாட்டு மைதானத்தில்  வருகிற  22ஆம் தேதி தொடங்கி  செப்டம்பர் 2 ஆம் தேதி வரை தொடர்ந்து  இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது.  இந்த  முகாமில்  ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் உள்பட மொத்தம் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வருகை தரவுள்ளனர்.  அதற்கான ஆயத்தப் பணிகள் ஈரோட்டில்  தீவிரமாக நடந்து வருகிறது. 

 

c

 

இந்த நிலையில்   ஈரோடு வ.ஊ. சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஈரோடு  கலெக்டர் கதிரவன்,  எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

பிறகு  கலெக்டர் கதிரவன் நிருபர்களுகளிடம்  கூறியதாவது:-    ஈரோடு வ.ஊ. சி விளையாட்டு மைதானத்தில் வருகிற  22ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  அவர்கள் தேவையான அடிப்படை வசதிகள் கழிப்பறை வசதிகள்  ஆகியவை மாவட்ட  நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.  மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.  நாளொன்றுக்கு 3000 பேர் வீதம் பத்து நட்களுக்கு 30 ஆயிரம் பேர் வரை  வர வாய்ப்பு உள்ளது.  10 நாட்களாக நடைபெறும் முகாமை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.  இந்த முகாம் அமைதியான முறையில் நடந்து முடிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது."  இவ்வாறு அவர் கூறினார்.

30 ஆயிரம் பேர் வரை வரவுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் கூறினாலும் மேலும் ஒரு மடங்கு கூடுதலாக இளைஞர்கள் வருகை இருக்கும் சில இடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டாலும் வருகிற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்குவதற்கும், தூங்குவதற்கும் சிரமப்பட வேண்டிய நிலையே இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Boat ride canceled in Bichhiwara due to rain

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.