Advertisment

தமிழ்நாடு முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. மதுரை, திருச்சி போன்ற முக்கிய இடங்களில் உள்ள அவரது சிலைக்கு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.