/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/602.jpg)
திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரிக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் ஆகியோரும் சென்றனர். மருத்துவமனைக்கு புறப்படுவதற்கு முன்னதாக கலைஞர் உடல் நலம் குறித்து அமைச்சர்களுடன் கேட்டறிந்தார்.
காவேரி மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலைஞரின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
நேற்று சபாநாயகர் தனபால் காவேரி மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். கடந்த வியாழக்கிழமை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வீரமணி ஆகியோர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரது உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)