ADVERTISEMENT
ADVERTISEMENT
முதல்வர் பழனிசாமி புனிதரும் அல்ல நானும் மகான் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,
முதல்வர் ஒன்றும் புனிதரல்ல நானும் ஒன்றும் மகான் அல்ல. டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை பார்த்து முதல்வர் பழனிசாமி பயந்திருக்கிறார்.
ஜெயலலிதாதான் என்னை கட்சியில் இருந்து நீக்கினார் ஆனால் அதேபோல சசிகலா பொதுச்செயலாளர் ஆனவுடன் என்னை கட்சியில் இணைந்தார். இப்போது 90% தொண்டர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள் தோல்வி பயத்தால்தான் இபிஎஸ், ஓபிஎஸ் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர் எனக் கூறினார்.
ADVERTISEMENT
Show comments