EPS consultation with senior ministers

Advertisment

அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைஎழுந்ததை அடுத்து முதல்முறையாகஅ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்று முடிந்ததுள்ளது. இந்தக் கூட்டத்தில்அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள்தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றுமாலையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் காரசாரமாக விவாதித்த நிலையில் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.