Skip to main content

இ.பி.எஸ். கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்! விளக்கம் அளித்த முதலமைச்சர்! 

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

EPS Attention-grabbing resolution brought! The Chief Minister explained!

 

சென்னை பெரம்பூர் கக்கன் ஜி காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். இவர், கடந்த 27 ஆம் தேதி இரவு கட்சி விஷயமாக வெளியே சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள், இளங்கோவனை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெட்டப்பட்டு இறந்து கிடந்த இளங்கோவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், இளங்கோவன் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் நேற்று அதிகாலை ரெட்டேரி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே அதிதீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலிஸாரிடம் சரணடைந்தனர். அவர்களை செம்பியம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  அதில் அவர்கள் வியாசர்பாடி கக்கன் ஜி காலனியைச் சேர்ந்த சஞ்சய்(19), அருண்குமார் (28), கொடுங்கையூர் எம்.ஆர். நகரைச் சேர்ந்த கணேசன் (23), வியாசர்பாடி கருணாநிதி சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (30) மற்றும் வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. 

 

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய்க்கும் இளங்கோவனுக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவனைக் கொன்றதாக தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

EPS Attention-grabbing resolution brought! The Chief Minister explained!

 

இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். சட்டமன்றத்தில் அதிமுக பகுதிச் செயலாளர் இளங்கோவன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் இ.பி.எஸ்., ‘கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக இளங்கோவன் தொடர்ந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்து வந்ததன் காரணமாக கொலை நடந்துள்ளது’ எனத் தெரிவித்தார். 

 

EPS Attention-grabbing resolution brought! The Chief Minister explained!

 

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார். இளங்கோவன், சஞ்சய் என்பவருடன் ஏற்கனவே முன்விரோதத்தில் ஈடுபட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வரவில்லை” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.