செந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி!!

eps

சேலம் மாவட்டம் வீரகனூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

திமுக ஆட்சியில் எப்படி டெண்டர் அறிவிக்கப்பட்டதோ அதே முறைப்படி திறந்தவெளி டெண்டர்தான் தற்போதும் விடப்படுகிறது. முறைகேடு நடக்கவே வாய்ப்பில்லை. ஆனால் தற்போது ஊழல் என கூறுவது இந்த ஆட்சிக்குகளங்கம் ஏற்படுத்த வேண்டும் என கருதி பொய் பிரச்சாரம் செய்து வருகிது திமுகஎன்றார்.

செந்தில் பாலாஜி கட்சி தாவல்பற்றிய கேள்விக்கு,

வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில் அவர் முதலில் திமுகவில் இருந்தார். அதன்பின் அதிமுகவில் இணைந்து பலன் அனுபவித்தார். அதிமுகவால்தான் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார். இந்த கட்சியில்தான் அவருக்கு எம்எல்ஏ சீட்டு கிடைத்து. பின்னர் அமைச்சர் எனும் உயர்பதவிக்கும் வந்தார். நன்றி மறப்பது நன்றன்றுநன்றல்லது அன்றே மறப்பது நன்று என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பாலாஜிக்காக சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்றார்.

edappadi pazhaniswamy senthil balaji
இதையும் படியுங்கள்
Subscribe