Skip to main content

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ஆங்கிலேயர்!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

விவசாயம் தான்  இந்திய மக்களின் உயிர்நாடி. அதனால் தான் இந்திய திருநாட்டின் முதுகெலும்பு விவசாயம் என கூறப்படுகிறது. போதிய மழை இல்லாததால், மண் வளமும் குறைந்து விட்டதால் இயற்கை விவசாயம் என்ற சொல் மங்கி செயற்கை விவசாயம் அதிகரித்தது. நஞ்செனும் உரமின்றி விவசாயமே இல்லையென்றாகி விட்டது.

 

Englishman who is interested in natural agriculture

 

இந்நிலையில் உரத்தை தவிர்த்து நஞ்சில்லா உணவே சிறந்தது என்பதை உணர்த்தும் வகையில் இயற்கை முறையிலான விவசாயத்தை ஊக்குவித்து கற்றுக் கொடுத்து வருகிறார் ஓர் ஆங்கிலேயர். 

 

புதுச்சேரி ஆரோவில் சர்வதேச பகுதியில் வசிப்பவர் இங்கிலாந்து போர்ஸ்ட் மவுத் பகுதியை சார்ந்த டங்கன் மைக்கென்சி. இவர் இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் படிக்கும் போதே விவசாயம் குறித்தான ஆர்வம் அதிகமானதால் ஆரோவில் வந்தபோது இங்கிருந்த விவசாயம் முறைகளை கற்றுக்கொள்ள ஆர்வமடைந்தார். 

 

m

 

தனது 19 வயதில் இங்கே வந்த அவர் கடந்த 26 வருடமாக தனக்காக  ஒதுக்கப்பட்ட 6 ஏக்கரில் உழவு செய்யாமல் இயற்கை முறைகளை கொண்டு  தமிழர்களின் பாரம்பரிய விளைபொருட்களை விளைவித்து விற்று வந்துள்ளார்.தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தால் தனது பெயரை கிருஷ்ணா என்று மாற்றிக்கொண்டு இயற்கை விளைபொருட்கள் விற்பனை குறையவே 2006 ஆம் ஆண்டு இயற்கை உணவகம் மற்றும் அங்காடியை திறந்துள்ளார்.

 

m

 

அன்றிலிருந்து  தன்னுடைய விவசாய நிலத்தில் வளரும் கீரைகள், காய்கறிகள், பழங்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.தமிழர்களின் பாரம்பரிய கீரை வகைகளான  முடக்கத்தான் கீரை, கீழாநெல்லி, பொன்னாங்கன்னி, திப்பிலி, பாலா போன்ற கீரைகள்,  வெண்டைக்காய், பப்பாளி, வாழை, முருங்கை காய்,  சுரைக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கனிகள்,   எலுமிச்சை, மிளகாய் உள்ளிட்டவைகளும் மரவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு, பனை கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும்,  மா , சப்போட்டா, வாழை , பப்பாளி  உள்ளிட்ட 140 வகையான இயற்கை வழி உணவு பொருட்களும் விளைவிக்கின்றார்.

 

இதில் உழவு இயந்திரம்  இல்லாமல் இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்தி கீரை, காய்கறிகள், பழங்களின் கழிவுகளை இயற்கை உரமாக கொண்டு விளைவிக்கப்பட்டவைகளை கொண்டு இயற்கை உணவகம் நடத்துகின்றார்.

 

m

 

மேலும் இந்த உணவகத்தில் பூ, பழங்களை கொண்டு இயற்கை பானமும்  ( ஜூஸ்), காய்கறிகளை கொண்டு சாலட்டும், சாமை, ஆரியம் (கேழ்வரகு) கொண்டு சிற்றுண்டியும், கிழங்குகளை  கொண்டு சிப்ஸ் -களையும் தயாரிக்கிறார். 

 

இயற்கை வழி உணவுகள் மூலம் பழந்தமிழரின் உணவு கலாசாரத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகின்றார் இந்த இங்கிலாந்து கிருஷ்ணா.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.