தள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு?

engineering consultation may Postpone

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வைத் தொடங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை தொடங்க உயர்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்
Subscribe