hh

Advertisment

அண்மையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்தமானஇடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 8 நாட்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்கள் வீடு அலுவலகங்களில் நடைபெற்ற நிலையில் தற்பொழுது சென்னையிலும் கரூரிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்தில் சோதனையானது நடைபெற்று வருகிறது.