Skip to main content

காலிப் பரிசுப் பெட்டி:கலையும் தலைகள்!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

ஜெ.வின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்சபட்ச குழப்பம் காரணமாக, அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து டி.டி.வி தினகரன் உருவாக்கியது தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அ.ம.மு.க. சசிகலா, ஜெ.வுடனிருந்ததால் அவர் சார்ந்த தேவர் சமூகத்தினர் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் முக்கியமானார்கள். நேரம். சசிகலா சிறைவாசம் போக தினகரன் அ.ம.மு.க. ஆரம்பித்ததால் சமூகம் காரணமாக அவர் பக்கம் ஆதரவாகத் திரண்டனர் தேவர் சமூகத்தவர்கள். குறிப்பாக தினகரன் தென்மாவட்டம்  வருகிறபோது அவர் சார்ந்த சமூகத்தினர் திரண்டு வந்து வரவேற்றது அ.ம.மு.க. விற்கு நல்லதொரு மாஸை ஏற்படுத்தியதற்கு மற்றதொரு காரணமும் பேசப்பட்டது.

 

 Empty gift box

 

அ.தி.மு.க.வின் எக்ஸ்.எம்.எல்.ஏ.க்களான ஆர்.பி.ஆதித்தன், அண்ணாமலை, இசக்கிசுப்பையா, மைக்கேல் ராயப்பன் இவர்களோடு அ.தி.மு.க.வின் பொறுப்பாளர்களான பாப்புலர் முத்தையா கல்லூர் வேலாயுதம் பாளை பகுதி செ.க்களான அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் அ.தி.மு.க.வினர்  பெரிய லெவலில் சாய்ந்தது தான். அது, அ.ம.மு.க.வின் பலம் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தியதால் முக்கிய கட்சிகளுக்கு சவாலாகவுமிருந்தது. 

 

 Empty gift box!

 

அ.ம.மு.க.வில் அமைப்பு ரீதியாக கிளைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக தென்மண்டல அமைப்பாளரானார் அ.தி.மு.க.வின் மாஜி முக்கிய புள்ளியான மாணிக்கராஜா. தேர்தல் நெருங்க பிற சமூகத்தின் ஆதரவாளர்களும் இணைந்தனர். இதனால் எம்.எல்.ஏ, எம்.பி. கனவு காரணமாக பலர் தங்களின் சொந்தப் பணத்தைக் கட்சி வளர்ச்சிக்காக காலி செய்தனர்.

 Empty gift box!

 

 Empty gift box!

 

நடந்து முடிந்த தேர்தலில் மக்களவைக்கு 37 தொகுதிக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் என களத்தில் நின்றும் ஒருவர் கூடத் தேறவில்லை. பல இடங்களில் டெப்பாசிட்டும் பறிபோனது.

 

 Empty gift box!

 

எதிர்பார்ப்புகள் நடக்காத சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்பு அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளிகளான அண்ணாமலை, ஆர்.பி.ஆதித்தன் போன்றவர்கள் அ.தி.மு.க.விற்கு நடையைக்கட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து அதிருப்தி காரணமாக நேற்று முன்தினம் அ.ம.மு.க.வின் மா.செ. பாப்புலர் முத்தையா, நெல்லை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இது, கட்சி மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த தி.மு.க பக்கமும் சாயும் முடிவிலுமிருக்கிறார்களாம்.

 

 Empty gift box!


 

 Empty gift box!

 

தினகரனை தொண்டர்கள், பொறுப்பாளர்கள் நெருங்கிவிடாதபடி தடையாய் நிற்கிறார் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா. அது தான் எங்களின் விலகலுக்குக் காரணம் என்கிறார்கள் மாறியவர்கள். இதனிடையே அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளியான இசக்கி சுப்பையா தன்னுடைய குற்றாலம் ரிசார்ட்டில் நேற்றும், முன்தினமும் தனது ஆதரவாளர்கள் முன்னூறு பேர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர் இதில் கலந்து கொண்ட சிலர்.

 



ஆனாலும் அ.ம.மு.க.வில் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.