Skip to main content

அச்சத்தில் பணியாளர்கள்! அலட்சியத்தில் பல்கலைக்கழகம்! 

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

Tamil Nadu M.G.R. Medical University


தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பணியாளர்கள் 700 பேர் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா பரிசோதனைகளுக்காக வரும் மக்களிடம் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கிறது தமிழக சுகாதாரத்துறை. ஆம்புலன்ஸ்களில் அந்த ரத்தமாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வந்து போகின்றன. பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் நான்காம் தளத்தில் உள்ள லேப்புகளில் இந்த ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலனஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிற ரத்தமாதிரிகளை, பல்கலைக்கழகத்தில் இரு தளங்களில் இருக்கும் பரிசோதனைக் கூடங்களுக்கு (லேப்) எடுத்துச் செல்ல தனி வழி ஏற்படுத்தி தரப்படவில்லை. 


பணியாளர்கள் பயன்படுத்தும் லிப்ட்டுகளையே இதற்கும் பயன்படுத்துகின்றனர். மேலும் முதல் தளத்திலும் நான்காம் தளத்திலும் உள்ள லேப்புகளுக்கு இடையே பல்கலைக்கழக நிர்வாக அறைகள் நிறைய இருக்கின்றன. இவைகளை கடந்துதான் கரோனா ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ரத்தமாதிரிகளை எடுத்துச் செல்ல தனி வழி ஏற்படுத்தவில்லை பல்கலைக்கழக நிர்வாகம். இதனால், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 700 ஊழியர்களும் அச்சத்துடனேயே பணிபுரிய வேண்டியதிருக்கிறது என்கிறார்கள். 

இதற்கிடையே,  பரிசோதனைக் கூடங்களில் பணிபுரியும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பயண்படுத்தும் மாஸ்க், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்திய பிறகு அலட்சியமாக குப்பைக்கூடைகளில் வீசப்பட்டு வந்தது. அதனை நாய்கள் கடித்து குதறி வந்தன. மருத்துவ கழிவுகளை கடித்து குதறியதில் சமீபத்தில் பத்து நாய்கள் இறந்துள்ளன. அதன்பிறகே, சுதாரித்துக்கொண்டு, மருத்துவ கழிவுகளை எடுத்துச் செல்ல தனியார் நிறுவனத்தை நியமித்தது பல்கலைக்கழக நிர்வாகம். தற்போது தினமும் மருத்துவ கழிவுகளை சேகரித்து எடுத்து செல்லும் தனிநபர்கள், முறையாக  பேக்கிங் செய்து, கழிவுகள் சிந்தாமல் சிதறாமல் எடுத்துச் செல்வதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால், கழிவுகள் எடுத்துச் செல்லப்படும்போது, பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் சிந்துகின்றன. அதனை மீண்டும் அள்ளிய பிறகு அந்த இடங்களை பினாயில் போட்டு சுத்தம் செய்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். இருப்பினும், தொற்று நம்மை தாக்குமோ என்கிற பயத்தில் பணியாளர்கள் இருக்கின்றனர். 

 

 


மேலும், 50 சதவீத பணியாளர்களை பயண்படுத்தவும், சிப்ட் முறையில் கடைபிடிக்கவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், அதனை பின்பற்றாமல், பல்கலைக்கழகத்தில் உள்ள 700 பணியாளர்களும் தினமும் வந்து போக வேண்டும்; வேலையே இல்லை என்றாலும் சும்மா உட்கார்ந்துவிட்டு செல்வதற்காகவாவது அலுவலகம் வர வேண்டும் என வலியுறுத்துகிறாராம் பல்கலைக்கழக பதிவாளர் அஷ்வந் நாராயணன். இதனால், தினமும் 700 பணியாளர்களும் அலுவலகம் வந்து செல்கின்றனர். 


பொது போக்குவரத்து இல்லாததால் வெகு தூரத்தில் இருந்து வரும் பணியாளர்கள் ஆட்டோவில்தான் வந்துபோக வேண்டியதிருக்கிறது. இதற்காக தினமும் 1000 ரூபாய் ஆட்டோவிற்கே தேவைப்படுகிறது என்றும் புலம்புகின்றனர் பணியாளர்கள். இதற்கெல்லாம் காரணம், பதிவாளர் அஷ்வந் நாராயணன், உதவி பதிவாளர் வெங்கடேஷ், பர்சனல் கிளர்க் விஜயக்குமார் ஆகியோர்தான் என்று சொல்கின்றனர் ஊழியர்கள். 

இதற்கிடையே, பல்கலைக்கழகத்தை கரோனா சிகிச்சை வார்டாக மாற்ற அரசு முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு அலட்சியங்களால் ஏற்கனவே பயத்திலிருக்கும் பணியாளர்கள், கரோனா சிகிச்சை வார்டுகள் இங்கு உருவாக்கப்படவிருப்பதால் மேலும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.