ADVERTISEMENT

உணர்ச்சிமயமான குரல் நடுத்தெருவில் நிறுத்தும்... உவைசிக்கு காங்கிரஸ் கண்டனம்

06:23 PM Nov 11, 2019 | rajavel

ADVERTISEMENT

காங்கிரஸ் மரணிக்கவேண்டும் என்று சொன்ன உவைசிக்கு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அஸ்லம் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,


உணர்ச்சி மயமான பிரச்சனைகளை காங்கிரஸில் நேரு வம்சாவளி தலைவர்கள் கையாண்ட விதம் தியாகம் நிறைந்தது. அன்றன்று பூத்த தலைவர்கள் அள்ளி வீசும் அவதூறுகளை நிறுத்திவிட்டு, நேரு குடும்பம் அரசியலில் ஆற்றிய பங்கையும் வரலாற்றையும் காங்கிரஸில் அவர்கள் செய்து கொண்ட சமரசத்தையும் அறிவியல் பூர்வமாக அனுக வேண்டும். நேரு அவர்கள் தன்னை நாத்திகராக அறிவித்த அறிவியளாலர். இந்திய அரசியல் சாசன அமர்வை சீர்குழைக்க நடந்த சதிகளை எல்லாம் முறியடித்து அன்னல் அம்பேத்கர் தலைமையில் அமைத்திட்ட சாதுரியம்.




காந்தியின் சனதான பிற்போக்கு தனங்களை உள்ளடக்கிய தீவிர வலதுசாரிகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியை மதசார்பற்ற வலதுசாரிகளாக மாற்றவே பெரும்பாடுபட்டார்.இன்று தீர்பிற்கு எதிராக எழுந்த மதசார்பற்ற இந்துமக்கள் குரலை உருவாக்கியதே காங்கிரஸ் தான்.அது ததான் நேரு அவர்கள் வெற்றி.

காஷ்மீர் மக்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும்இந்துக்களை உருவாக்கியதே காங்கிரஸ் பெருமை. முத்தலாக் மசோதாவை எதிர்த்து இந்துக்களை பேச வைத்தது காங்கிரஸ் பெருமை. பாபர் மசூதி முஸ்லீம்களுக்கே என லட்சக்கணக்கான இந்துக்களை பேச வைத்தே காங்கிரஸ்.

காமராசர் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட பரமேஷ்வரனைஇந்து அற நிலைஅமைச்சராக நியமித்தது காங்கிரஸ் பெருமை ஆயிரக்கனக்கான படித்த பிராமனர்கள் மத்தியில் அம்பேத்கரை சட்ட அமைச்சராகவும் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தை கல்வி அமைச்சராக நியமித்த காங்கிரஸ் பெருமை. காஷ்மீரின் தனித்தன்மை காத்த காங்கிரஸ் பெருமை.அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் மதசார்பற்ற அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் சமரசம் வலதுசாரிகளுக்கும் இடது சாரிகளுக்கும் மத்தியில் எடுத்தபுது முயற்சியே மதசார்பற்ற அரசியல்.

அதற்கென சொந்த கட்சியினரை தயார்படுத்தவே கடும் போராட்டம்.கட்சிக்குள் கரையான்களாக தீவிர வலதுசாரிகளின் பிளவு முயற்சி இவ்வளவையும் தான்டி பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையாளர்களை மதசார்பற்ற சனநாயக சக்திகளாக வென்றெடுத்தது காங்கிரஸ் வெற்றி. இந்திரா இல்லாத இந்தியா என வெறியூட்டி சீக்கிய தீவிரவாதத்திற்கு இந்திராவை பலியிட்டது வலதுசாரிகள் தனியார்மய தாராளமய சந்தைமயத்திற்குஆதரவாக மிஸ்டர்கிளீன் ராஜிவ்காந்தி இமேஜ்யை உடைத்து பலிவாங்கிய வலதுசாரிகள் ஒதுக்கப்பட்ட நரசிம்மராவ் மூலம் தங்கள் விருப்பங்களை நிறைவு செய்த வலது சாரிகள்.


நேரு குடும்பம் பழியை சுமக்கிறது. அம்பேத்காரின் சில சமரசம் தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாத்தது.காயிதே மில்லத்தின் சமரசம் முஸ்லிம் மக்களை பாதுகாத்தது. காங்கிரசின் சமரசம் மதசார்பற்ற குடியரசை பாதுகாத்தது. கூட்டத்தில் கோசம்போடுவது யாருக்கும் எளிது. தனிமனிதனை பாதுகாப்பது அரசின் கடமை.ஜெய் ஸ்ரீ ராம் எனும் கோசத்தின் கூட்டு வன்முறையின் கோரத்தை நாடு உணர்ந்துள்ளது. சாதியாய் பிளவுபடுத்தி மதமாய் ஒன்றுபடுத்திய வலதுசாரி அரசியலையும் ஒன்றாய் இருந்த நாம் பல அமைப்புகளாக பிரிந்த பிரச்சனைகளையும் நேர்மையுடன் புரிந்து கொள்ள வேண்டும்.


நேருவும் காங்கிரசும் இல்லையென்றால் சிறுபான்மை மக்கள் என்றோ நசுக்கப்பட்டிருப்பார்கள்.உணர்ச்சிமயமான குரல் நடுத்தெருவில் நிறுத்தும். சிறுபான்மை சமூகமே கல்வியை கையில் எடு ! அதிகாரத்தை கைப்பற்று !அரசியலை உனதாக்கு !! இதுவே நம் அறம் அதை நோக்கி நகர்வோம். இவ்வாறு கூறியுள்ளார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT