அமைச்சரைச் சந்தித்து கோவிட்-19 தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய கொரிய குடியரசு துணைத் தூதரகம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (21/11/2021) தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி- யிடம் கொரிய குடியரசு துணைத் தூதரகம் சார்பாக தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பு உபகரணங்கள் அடங்கிய 4,000 தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கூடுதலாக 70,000 முகக்கவசங்களும், 5 ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் கொரிய குடியரசு தூதரக ஜெனரல் யங்செயுப் குவான், டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், இன்கோ கொரிய கலாச்சார மைய இயக்குனர் ரதி ஜாஃபர், ஜோ சங்க்யுன், கிம் சாங்வூஆகியோர் கலந்து கொண்டனர்.

anbil mahesh Govt.schools minister students
இதையும் படியுங்கள்
Subscribe