Skip to main content

அதிகாரத்தை பயன்படுத்தி பதினோரு எம்.எல்.ஏக்களை தப்பவைக்கிறார் சபாநாயகர் - பாலகிருஷ்ணன் சாடல்

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

"பதினோரு எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை தனது செல்வாக்கை பயன்படுத்தி சபாநாயகர் தனபால் அவர்களை தப்ப வைக்க முயற்சிக்கிறார், அவர்களோடு சேர்ந்து அவரும் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்," என்கிறார் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

திருவாரூர் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வந்தவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

 Eleven MLAs escape using power of Speaker- cbm balakrishnan press meet


"தரமான குடிநீரை கூட தருவதற்கு இயலாத நிலையில் நமது நகராட்சி நிர்வாகமும், அரசும் செயல்பட்டு வருகிறது. நோய் வந்ததற்கு பின் தீர்வுகாண முயல்வதை விட முன்னெச்சரிக்கையாக  தடுப்பதற்கு முன்வரவேண்டும். கொரானா சோதனை செய்யும் மையத்தை மாவட்டத்துக்கு ஒன்றாக அதிகரிக்க வேண்டும்.இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தரும் தகவல்களில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. உறுதியான தகவலை தரவேண்டும்" என்றார்.

பதினோரு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டிருப்பது குறித்து பேசியவர், "இந்த வழக்கில் சம்பவ இடத்தில் இருந்த சபாநாயகர் தனபாலே இதற்கு சாட்சி, அவர் ஆதாரம் தேடாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய பதவியை பயன்படுத்தி 11 பேரை தப்பவைக்க முயற்சிக்கிறார். நாளை 11 பேருடன் சேர்த்து அவரும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்." என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.