Skip to main content

தோட்டத்துக்குள் புகுந்து விளைநிலங்களை அழிக்கும் யானைகள்! குமுறும் விவசாயிகள்!!

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி பகுதிகளில் தோட்டத்துக்குள் புகுந்து விளைநிலங்களை காட்டு யானைகள் அழித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் கன்னிவாடி ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் வாழை, தென்னை, காப்பி, மிளகு உள்பட சில விவசாயம் செய்து வருகின்றனர். சமீபகாலமாகவே இப்பகுதியில் வனவிலங்குகள் இந்த தோட்டங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை அழித்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

 

 Elephants enter the garden and destroy the farmland!


வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் அவை விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தன. இந்த யானை கூட்டம் தொடர்ந்து கன்னிவாடி வனப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று இரவு பள்ளபட்டி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு விளைந்த பயிர்களை நாசப்படுத்தி விட்டு சென்றன.

அதேபோல் சத்தியமூர்த்தி என்பவர் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது. மேலும் வைகை மணி என்பவரின் தோட்டத்தில் மாமரம், தென்னை, காப்பி, மிளகு போன்ற மரங்களை வேரோடு சாய்ந்தன. வெற்றி என்பவரின் தோட்டத்தில் சோளப் பயிர்களை சேதப்படுத்தியது. ஏற்கனவே விவசாயி சத்தியமூர்த்தி வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக முள்வேலி அமைத்து இருந்தார். ஆனால் யானைகள் அந்த முள் வேலியை உடைத்து உள்ளே புகுந்து விவசாய நிலங்களை அழித்து அட்டகாசம் செய்து வருகின்றன.

 

 Elephants enter the garden and destroy the farmland!


இப்படி ஒரு விவசாய நிலங்களை யானைகள் அழித்து நாசப்படுத்தி வருவதைக் கண்டு விவசாயிகள் மனம் நொந்துபோய் வருகிறார்கள். இந்த யானைகள் பெரும்பாலும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை காட்டுப்பகுதியில் இருந்து வந்து தோட்டங்களில் புகுந்து விடுகின்றன. இதனால் மாலை வேளையில் விவசாயிகள் தோட்டத்துக்கு செல்லவும் அஞ்சு வருகின்றனர்.

இதுபற்றி கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் ரேஞ்சர் ரவிச்சந்திரன் தலைமையில் பாரஸ்ட் தண்டபாணி. வனக்காப்பாளர் சங்கர். உள்பட வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று அந்த யானைக் கூட்டங்களை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படி இருந்தும் குட்டி யானைகளுடன் யானைகள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு உள்ளதால் விவசாயிகள் பீதியில் இருந்து வருகிறார்கள். 

 

 Elephants enter the garden and destroy the farmland!

 

ஆனால் திண்டுக்கல் வனக்கோட்டத்தில் ஏழு ரேஞ்சர்கள் இருக்க வேண்டும் ஆனால் நத்தம் ஒட்டன்சத்திரம் கன்னிவாடி கோட்டங்களில் ரேஞ்சர்கள்  இல்லாததால் மற்ற கோட்டங்களில் இருக்கக் கூடிய ரேஞ்சர்கள்  பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அப்பகுதிகளில் உள்ள விவசாயநிலங்களை அழித்துவரும் யானைகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் காலியாக உள்ள இடங்களுக்கு ரேஞ்ரசகளை உடனடியாக வனத்துறை அதிகாரிகள்  நியமித்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து வரும் வன விலங்குகளையும் விரட்டியடிக்க ஏதுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.