ADVERTISEMENT
ADVERTISEMENT
வேலூர் மாவட்டம், குடியாத்தம், தமிழகம் - ஆந்திரா எல்லையில் சைணகுண்டா சோதனை சாவடி அருகே ஆந்திரா எல்லை பகுதியான மொசலமடுகு பகுதியில் குடியாத்தம் - பலமனேரி சாலை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையை கடந்துள்ளன. அப்பொழுது குடியாத்தம் - பலமனேரி சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு, யானைகள் கூட்டமாய் கடந்ததை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அவற்றை மேலும் சாலைக்கு வரவிடாமல் காட்டுக்குள் விரட்டினர்.
ADVERTISEMENT
Show comments