Skip to main content

சூளகிரி வனப்பகுதியை மையம் கொண்ட யானைகள்; விவசாயிகள் கவலை!

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை பகுதிகளில் இருந்து 13 யானைகள் ஓசூர் அருகே சூளகிரியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால், கோடை உழவைத் தொடங்கியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகம் சானமாவு பகுதிகளில் சுற்றித்திரிந்த முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 6 மாதங்களுக்கு முன் தமி-ழக எல்லையை கடந்து கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றன. அந்த யானைகள் கோலார், முளுபாகலு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளில் சுற்றி வந்தன. தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநில வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

 

 

 Elephants that center the Sulagiri forest; Farmers are concerned!


இதனால் அங்கு சுற்றித்திரிந்த யானைக்கூட்டம் இரண்டு, மூன்று குழுக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி தமிழக வனப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் நேற்று காலை ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய 13 யானைகள், சூளகிரி அருகே நீலவங்கா கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

தற்போது ஓசூர் பகுதியில் கோடை மழை பெய்துள்ளதால், கோடை உழவுப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சமயத்தில் யானைகள் கூட்டம் வந்துள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும், விவசாயிகளும் வனப்பகுதிக்குள் தனியாகச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story

காட்டுத்தீ பரவல்; திணறும் வனத்துறை

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
spread of wildfires; A forest department that is stifling

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருவது வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் சவாலாகி வருகிறது. குன்னூரில் பாரஸ்ட் ஸ்டேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீயானது நாளுக்கு நாள் வேக வேகமாக பரவி வருவது அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் குன்னூரில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை தீயில் கருகி உள்ளன. வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் என மொத்தமாக 150 க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிச்சாங்கரை, ஊத்தாம் பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னூர், பெரியூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் தீப்பற்றக் காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சின்னூர், பெரியூர் மலை கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரும் ஆண்டவர் என்பவரும் விவசாய கழிவுகளை கொட்டி தீ வைத்தபொழுது தீ வனப்பகுதிக்கு பரவியது விசாரணையில் தெரிவந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பான ஒன்று என கருதப்பட்டாலும் சிலரின் அத்துமீறலால் காட்டுத்தீ உருவாகும் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.