Skip to main content

சூளகிரி வனப்பகுதியை மையம் கொண்ட யானைகள்; விவசாயிகள் கவலை!

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை பகுதிகளில் இருந்து 13 யானைகள் ஓசூர் அருகே சூளகிரியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால், கோடை உழவைத் தொடங்கியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகம் சானமாவு பகுதிகளில் சுற்றித்திரிந்த முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 6 மாதங்களுக்கு முன் தமி-ழக எல்லையை கடந்து கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றன. அந்த யானைகள் கோலார், முளுபாகலு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளில் சுற்றி வந்தன. தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநில வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

 

 

 Elephants that center the Sulagiri forest; Farmers are concerned!


இதனால் அங்கு சுற்றித்திரிந்த யானைக்கூட்டம் இரண்டு, மூன்று குழுக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி தமிழக வனப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் நேற்று காலை ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய 13 யானைகள், சூளகிரி அருகே நீலவங்கா கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

தற்போது ஓசூர் பகுதியில் கோடை மழை பெய்துள்ளதால், கோடை உழவுப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சமயத்தில் யானைகள் கூட்டம் வந்துள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும், விவசாயிகளும் வனப்பகுதிக்குள் தனியாகச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.