Skip to main content

மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த யானை!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

An elephant trapped in an electric fence has died tragically ..!


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி என்ற வனச்சரகத்திற்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில், காளையா என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில்  மக்காச்சோளம் சாகுபடி செய்துவருகிறார். 

 

இவருடைய விவசாய நிலம், அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள், விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் யானை, காட்டுப்பன்றி ஆகிய வன விலங்குகளிடம் இருந்துதான் பயிரிட்ட பயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள, காளையா தனது விவசாய நிலங்களைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.


18ஆம் தேதி  இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, அவர் அமைத்திருந்த  மின்வேலியில் சிக்கி துடிதுடித்துப் பரிதாபமாக இறந்துவிட்டது. இந்தத் தகவல் அறிந்த ஜீரஹள்ளி வனத்துறையினர், அந்தச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் உயரழுத்த மின்சாரத்தை சட்டவிரோதமாக, கம்பி வேலிக்குப் பாய்ச்சியதின் காரணமாகத்தான், யானை மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகத் தெரியவந்தது. 


இறந்த யானைக்கு 8 வயது இருக்கும் எனவும் இந்தச் சம்பவம் குறித்து விவசாயி காளையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.


வனப்பகுதியில் பயிர்களைக் காப்பாற்ற அமைக்கப்படும் மின் வேலிகளில், குறைந்தளவு மின்சாரமே பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலர் அதிக மின்சாரம் பாய்ச்சுவதால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இதுபோன்ற விபத்துகள் சுற்றுச்சூழல், வன ஆர்வலர்களை கவலைகொள்ள வைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.