Skip to main content

கோவிலுக்கு சென்றவரை மிதித்துக் கொன்ற யானை...

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

The elephant that trampled to death while going to the temple ...

 

கோவையை அடுத்த சிறுவாணி சாலை போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் யானை மிதித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் பூண்டி மத்தி பீட்டுக்கு உட்பட்ட நரசிபுரத்தில் இருந்து தாமனம்புதூர் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் உள்ள ஓடை அருகில் சுமார் 40 வயதுடைய அடையாளம் தெரியாத நபர் காட்டு யானை தாக்கி இறந்ததாக, நேற்று (29.01.2021) காலை 7.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோவில் பூசாரி  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதையடுத்து வனத்துறை அலுவலர் ஆசிஃப் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் போளுவாம்பட்டி காப்புக்காட்டு பகுதியில் பிணம் கிடந்தது தெரியவந்தது. மேலும் இறந்த நபர் இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்தவர் அல்ல என்பதும் தெரியவந்தது

 

இந்த நபர் அடிக்கடி சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விஸ்வாமித்திரர் கோவில் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வார் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, அந்தக் கோவில் பூசாரி கணேஷ் என்பவரிடம் வனதுறையினர் விசாரணை செய்ததில், இறந்த நபர் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (45) என்பதும் இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

 

மேலும் இந்த நபர் கோயிலுக்கு அடிக்கடி வருபவர் என்றும், முழுவதும் சாராயம் குடித்து விட்டு இங்கு வந்து சுற்றிக்கொண்டிருப்பார் என்றும் பூசாரி தெரிவித்துள்ளார். நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் புதூர் கிராமத்தில் ஒரு ஒற்றை காட்டு யானை சுற்றிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இரவு ரோந்து பணி குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தக் காட்டு யானையை வேட்டைக்காரன் கோவில் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

 

அதற்கு முன்னதாக கார்த்திக், யானை தாக்கி இறந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வனவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்துபோன கார்த்திக் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.