திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியாருக்குச் சொந்தமான யானை ஒன்று பிளிறிக்கொண்டே கட்டுக்கடங்காமல் சாலையில் ஓடியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாகனின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு யானை கட்டுப்படுத்தப்பட்டதால், அமைதியடைந்த யானை பிறகு வாகனத்தில் ஏற்றி அதன் இருப்பிடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. யானைக்கு சரிவர உணவு வைக்காததால் அமைதியை இழந்து ஓடியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.