திருச்சி வந்தடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Electronic voting machines arrived Trichy district

மகாராஷ்டிராவில் இருந்து திருச்சி மாவட்டத்திற்குமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மொத்தம் 4,560 ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 1,220 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 3,490 கண்ட்ரோல் யூனிட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Electronic voting machines arrived Trichy district

அதில் தற்போது மகாராஷ்டிராவில் இருந்து 570 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 230 கண்ட்ரோல் யூனிட்டுகளும் இன்று (22.12.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்குக்கொண்டுவரப்பட்டது.

Electronic voting machines arrived Trichy district

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்தை, அனைத்துக் கட்சி உறுப்பினர்களின்முன்பாக வைக்கப்பட்டிருந்த 'சீலை' மாவட்ட ஆட்சியர் திறந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைவருக்கும் முன்பாக இறக்கி வைக்கப்பட்டது. மீதமுள்ள 4,330 இயந்திரங்கள், வருகின்ற 25ஆம் தேதி கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EVM MACHINE trichy
இதையும் படியுங்கள்
Subscribe