Skip to main content

பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கான மின்காந்த அலை ஆய்வு... பூனை கால் தடம் பதிந்த செங்கல் கண்டெடுப்பு!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

Electromagnetic wave study for Porpanaikottai excavation ...   Discovery of cat footprint brick!

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் சுமார் 20 உயரத்தில் அதே அளவு அகலத்தில் 1.6 கி.மீ சுற்றளவு கொண்ட பழமையான கோட்டை அகழியுடன் உள்ளது. கோட்டையின் மேலே பாதுகாவலர்கள் நிற்கும் கொத்தலமும் பல இடங்களும் காணப்படுகிறது. கோட்டையின நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளி, கருப்பர் போன்ற காவல் தெய்வ வழிபாடுகள் இன்றளவும் உள்ளது.

 

இந்த சங்ககால கோட்டைக்குள் உள்ள நீர்வாவி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழி கல்வெட்டில் 'ஆடு, மாடு பிடிக்க வந்தவர்களை எதிர்த்து போராடி மடிந்த போர் வீரனின் பெயர்' எழுதப்பட்டுள்ளது. மேலும் கோட்டைக்குள் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் மற்றும் கோட்டைக்கு வெளியே ஆயுத தொழிற்சாலை செயல்பட்டதற்கான சென்னாக்குழிகள், இரும்பு உருக்கு கழிவுகளும் காணப்படுவதால், இதனை அகழாய்வு செய்ய புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதிசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். 

Electromagnetic wave study for Porpanaikottai excavation ...   Discovery of cat footprint brick!


இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பொற்பனைக்கோட்டையை ஆய்வு செய்ய கேட்டதால் மத்திய தொல்லியல் துறை திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் இனியனை இயக்குநராக கொண்டு அகழாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. 

 

அகழாய்வுக்கு முன்பே அகழாய்வு செய்ய வேண்டிய இடங்களை ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று (25/07/2021) திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் மின்காந்த அலை கதிர்வீச்சு மூலம் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவு சில தினங்களில் கிடைத்தவுடன் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளது. மேலும் அகழாய்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட கிராம மக்களின் முழு ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. 

Electromagnetic wave study for Porpanaikottai excavation ...   Discovery of cat footprint brick!

இந்த நிலையில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் கரு.ராஜேந்திரன், ஆ.மணிகண்டன், கஸ்தூரிரங்கன், ராஜாங்கம் உள்ளிட்ட குழுவினர், மேலும் மேற்பரப்பாய்வு செய்த போது கோட்டையின் வடக்கு வாசல் பகுதியில் கொத்தலம் அருகே ஒரு பெரிய செங்கல்லில் ஒரு பூனையின் கால் தடம் பதிவாகி இருந்ததைக் கண்டறிந்தனர். மேலும் பழங்கால பெண்கள் விளையாடப் பயன்படுத்திய வட்ட வடிவ சுடுமண் சில கண்டறியப்பட்டது. "அகழாய்வு செய்யும் போது இதேபோல பல அபூர்வமான பொருட்கள் கிடைக்கும். மேலும் ஆயுதங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கோட்டைக்குள்ளேயே பழைய கட்டுமானங்களும் வெளிப்படலாம்" என்றார் ஆசிரியர் மங்கனூர் ஆ.மணிகண்டன்.

 

விரைவில் தமிழர்களின் வரலாற்று சான்றுகளோடு பொற்பனைக்கோட்டை வெளி வரப் போகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.