Skip to main content

''மழைநீர் வடிந்தபின் மின் விநியோகம் சீர்செய்யப்படும்'' - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

 '' Electricity supply will be restored after rainwater drains '' - Interview with Minister Senthilpalaji!

 

நேற்று முன்தினம் (06.11.2021) இரவு முதலே சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர்,  ஆவடி, பட்டாபிராம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 '' Electricity supply will be restored after rainwater drains '' - Interview with Minister Senthilpalaji!

 

இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார், ''பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. மின்சாரத்துறையைப் பொறுத்தவரை சீரான மின் விநியோகம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்கள். குறிப்பாக, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை தமிழ்நாடு முதல்வர் கொடுத்துள்ளார். சென்னையில் இருக்கக் கூடிய 223 துணைமின் நிலையங்களில் ஒரே ஒரு துணை மின்நிலையத்தில் மட்டும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,757 ஃபீடர்களில் 18 ஃபீடர்களில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 34,047 மின்மாற்றிகளில் 201 மின்மாற்றிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 44 லட்சத்து 50 ஆயிரம் மின் பயனீட்டாளர்களில் 12,297 மின் பயனீட்டாளர்களுக்கான மின்விநியோகம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மழைநீர் வடிந்தபின் மின்விநியோகம் சீர்படுத்தப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.