(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இரண்டாவது அணு உலையில் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஜனவரி முதல் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.