Skip to main content

ரவுடி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற மின்வாரிய அதிகாரி!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

திருவெறும்பூர் அருகே உள்ள மேலே குமரேசபுரத்தை சேர்ந்தவர் முருகையா மகன் ரஜினி (எ) கருப்பையா தனது நண்பன் ரஞ்சித்தோடு டூவிலரில்  கீழே குமரபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் வழிமறித்து ரஜினியை கொலை செய்துவிட்டு ரஞ்சித்தையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தமுடைய குற்றவாளிகள் காரில் தப்பிச் செல்வதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அந்த காரை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் மடக்கி பிடித்தனர்.

Electricity officer who went to jail in Rowdy attacking case


அந்த காரில் இருந்த நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த குருபாகரன் ( 46), மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்தி (23), கைலாசபுரம் வ உ சி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் (22), குரு பாகரனின் மனைவி நித்தியா (40) இவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். காட்டூர், வின் நகர் 4வது தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ்குமார் (ஏ குட்டி ஆகிய 5 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

 

Electricity officer who went to jail in Rowdy attacking case


அவர்களிடம் திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் ரஜினியின் சொந்த ஊர் கள்ள பெரம்பூர் என்றும் அங்கு ரஜினி மீன் பண்ணை வைத்துள்ளதாகவும் இந்நிலையில் ரஜினிக்கும் குருபாகரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பு இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் ரஜினியின் மீன் பண்ணையில் குருபாகரன் தன்னை ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ளும்படி கூறியதாகவும் அதன் அடிப்படையில் குருபாகரனிடமிருந்து ரஜினி சிறிது சிறிதாக 3 லட்சம் வரை பணம் வாங்கி விட்டதாகவும் இந்நிலையில் மீன் பண்ணை தொழில் நலிவடைந்தாகவும்.

Electricity officer who went to jail in Rowdy attacking case


அதனால குருபாகரன் தனது பங்கு தொகையை திரும்ப தருமாறு ரஜினியிடம் கேட்டதாகவும் அதனால் ரஜினி தன்னிடம் பணம் இல்லை என்றும் வேண்டும் என்றால் தன்னிடமுள்ள காரை வைத்துக் கொள்உனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு காரை மீட்டு கொள்வதாக கூறியுள்ளார்.

ஆனால் ரஜினி பணத்தை கொடுக்கவில்லை இந்நிலையில் குருபாகரன் ரஜினியிடம் பணம் கேட்டதற்கு என்னிடம் பணம் இல்லை என்றும் அதனால் காரை கொடு வேண்டுமென்றால் அந்த காரை விற்று விட்டு பணம் தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் குருபாகரன் ரஜினியிடம் அந்த காரை கொடுத்துள்ளார். ரஜினி அந்த காரை விற்றுள்ளார் ஆனால் குருபகரனுக்கு உரிய பணத்தை கொடுக்கவில்லை.

Electricity officer who went to jail in Rowdy attacking case


இதனால்  இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினி குருபரனின் மனைவி நித்யா வித்தியாவிற்கு போன் செய்து தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து நித்யா தனது கணவன் குருபாகரனிடம் ரஜினி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் பணம் போனால் போகட்டும் ஆனால் ரஜினியை விட கூடாது என்று  தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும் அதன் அடிப்படையில் ரஜினியை தீர்த்து கட்டியதாகவும் சசிகுமார் ரஜினி  மொபட்டில் வருவது குறித்து தகவல் சொல்லி அதன் அடிப்படையில் வந்து வெட்டி விட்டு தப்பி செல்லும் பொழுது போலீசார் பிடித்து விட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற சிலரை திருவெறும்பூர் போலீசார் தேடிவருகின்றனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Electricity officer who went to jail in Rowdy attacking case


ரவுடி கொலை வழக்கில் ஒரு பெண் மின்சார வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக அவரை கைது செய்தார்கள் என விசாரித்த போது.. கொலை நடந்த இடத்தில் மின்சார வாரிய அதிகாரி இல்லை என்ற பொழுதிலும் அவர் மீது வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பியது போலிஸ் திட்டமிட்டு வழக்கு பதிந்துள்ளார்களாம். கொலை செய்த கொலையாளிகள் மின்சார வாரிய அதிகாரிக்கு தகவல் சொன்னதால் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளளோம் என்கிறார்கள் போலிசார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.