ADVERTISEMENT

கேட்டில் பாய்ந்த மின்சாரம்... அடுத்தடுத்து உயிரிழந்த தம்பதி

07:39 PM Nov 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கோடம்பாக்கத்தில் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அதனைத் தொட்ட தம்பதி இருவர் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மொத்தம் ஆறு வீடுகள் உள்ளது. தரைத்தளத்தில் உள்ள வீட்டில் மூர்த்தி (78) என்பவர் அவரது மனைவி பானுமதி (73) ஆகியோர் வசித்து வந்தனர். மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வந்தார். மீதமுள்ள நான்கு வீடுகளில் யாரும் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் குடியிருப்பின் வெளிப்புற கேட்டை பூட்டுவதற்காக மூர்த்தி சென்றுள்ளார்.

அப்பொழுது கேட்டின் மீது பொருத்தப்பட்டிருந்த அலங்கார மின்விளக்கிற்கு செல்லக்கூடிய வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் இரும்பு கேட்டிலும் பாய்ந்தது. இதனை அறியாமல் கேட்டை தொட்ட மூர்த்தி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் கேட்டை பூட்ட சென்ற கணவர் வராதால் அவரை தேடிக்கொண்டு மனைவி பானுமதி வந்துள்ளார். அப்பொழுது கேட்டில் தொங்கியபடி இருந்த கணவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் மின்வாரிய அதிகாரிகளுடன் வந்த போலீசார், மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு இருவரது சடலத்தையும் மீட்டனர். அதனைத் தொடர்ந்து உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT