Skip to main content

மின்வாரிய ஊழியர் கொலை... முதல் மனைவியிடம் விசாரணை... மகன்கள் சிறையில் அடைப்பு

Published on 24/05/2020 | Edited on 24/05/2020

 

 

Electricity Employee



இரவு பணி பார்த்த மின்சார வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அவரது முதல்தாரத்து மனைவி மற்றும் மகன்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

அரியலூர் மாவட்டம், த.கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் கனகசபை (வயது50). இவர் திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு முதல் தாரத்தில் அஞ்சம்மாள் (வயது 48) என்ற மனைவியும், இவர்களுக்கு கமலாதேவி (வயது 31) என்ற மகளும், கலைச்செல்வம் (வயது 27), கலைவாணன் (வயது 23) என்ற மகன்களும் உள்ளனர். இதில் கமலாதேவிக்கு திருமணமாகிவிட்டது.  
 

மகளுக்கு திருமணமானவுடன் கனகசபை அவர்களை விட்டு பிரிந்து வந்து திருமானூர் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, சங்கீதா(வயது 34) என்பவரை திருமணம் செய்து கொண்டு, திருமழபாடி கிராமத்தில் சொந்தமாக வீடுகட்டி சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக அங்கே தங்கியுள்ளார். கனகசபைக்கும், சங்கீதாவிற்கும், தினகரன்(வயது 19), தினேஷ்குமார்(வயது 15) என்ற மகன்களும், திவ்யா( வயது 17) என்ற மகளும் உள்ளனர். கனகசபை திருமழபாடியிலிருந்து தினமும் கீழப்பழுவூருக்கு துணை மின் நிலையத்திற்கு பணிக்கு சென்று வருகிறார். முதல் மனைவி அஞ்சம்மாள் குடும்பத்தினருக்கும், கனகசபைக்கும் ஏதோ முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
 

இந்நிலையில் 18ந் தேதி இரவு 7 மணியளவில் கனகசபை இரவுப் பணிக்காக கீழப்பழுவூர் துணை மின் நிலையத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இரவு சுமார் 12 மணி வரை கனகசபை தூங்காமல் பீடர் பிரேக்கர் ரீடிங் எடுத்துக்கொண்டு  இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 19 ந்தேதி காலை டியூட்டி மாற்ற வந்த, மற்றொரு மின் பாதை ஆய்வாளர் ஆங்கியனூரைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 48), காலை 5.50 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வந்து அலுவலக கட்டிடத்திற்கு சென்று உள்ளே பார்த்த போது கனகசபை கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பதறிப் போன செல்வக்குமார் தனது உயரதிகாரிகளுக்கும், கீழப்பழுவூர் போலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
 

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன், துணை கண்காணிப்பாளர் திருமேனி, மற்றும் கீழப்பழுவூர் போலிசார் வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து கை ரேகைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது துணை மின் நிலைய வளாகத்தை சுற்றி வந்து நின்றது. மேலும், திருமானூர் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் கொலை செய்யப்பட்ட கனகசபை உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கீழப்பழுவூர் போலிசார், கொலை செய்யப்பட்ட கனகசபை முதல் மனைவி அஞ்சம்மாள், மகன்கள் கலைச்செல்வம், கலைவாணன் ஆகியோரிடமும், மேலும் இந்த கொலையில் ௯லிப்படைக்கு ஏதும் தொடர்பு உள்ளதா என கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Electricity Employee sons


 

கனகசபையின் இரண்டாவது மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீஸார் மின் ஊழியர் கனகசபை கொலை தொடர்பாக விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில், கனகசபை முதல் மனைவி அஞ்சம்மாளுக்கு, சொத்து, பணம் ஏதும் தரவில்லை என்றும், அதற்காக ஜீவனாம்சம் கேட்டு அஞ்சம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வருவதும் தெரியவந்தது.  இதனால் ஆத்திரமடைந்த அஞ்சம்மாளின் மகன்களான கலைச்செல்வம்(27) மற்றும் கலைவாணன்(22) ஆகியோர் சேர்ந்து தந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல மாதங்களாக காத்திருந்த அவர்கள், கனகசபைக்கு இரவு பணி எப்போது வரும் உடன் யாரும் பணியாற்றுகிறார்களா என நோட்டமிட்டும் வந்துள்ளனர்.
 

ல



இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு கீழப்பழுவூரில் உள்ள துணை மின்நிலையத்துக்கு கனகசபை பணிக்கு சென்று, அங்கு அவர் பணியிலிருந்த போது, அவருடன் பணியில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு கனகசபையின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கனகசபையை கொலை செய்த அவரது மகன்கள் இருவரையும் கீழப்பழுவூர் போலீஸார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தனது தந்தையையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.