Skip to main content

மின் வாரியம் அலட்சியம்... அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சலவைத் தொழிலாளி பலி

Published on 13/09/2019 | Edited on 13/09/2019
- thiruvarur -



திருவாரூர் அருகே உள்ள தென்னவராயன்நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (57). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மோகன் சலவைத் தொழிலாளி. ஆடு, மாடுகளை மேய்ப்பதையும் தொழிலாக கொண்டிருந்தார். 


 

நேற்று வழக்கம் போல் தனது ஆடுகளை அருகில் உள்ள வயலில் மேய்க்க சென்றுள்ளார் மோகன். அப்போது தவறுதலாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற அவரது நாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.


 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த இருபது தினங்களுக்கு மேல் வயல்வெளியில் மின்கம்பிகள் அறுந்து கிடக்கிறது. இதனை பலமுறை மின்சார ஊழியர்களுக்கும், மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிட்டுவிட்டோம். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. மின்சாரத்துறையினர் காட்டிய அலட்சியமே மோகனின் உயிரிழப்புக்கு காரணம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை மின்சார வாரியமும் அரசும் வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்." என கூறுகின்றனர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.