Skip to main content

மின்சார வாரியத்தின் கட்டண கொள்ளை –பொதுமக்கள் அதிர்ச்சி!

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

electricity charges


கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அடித்தட்டு ஏழை மக்கள், நடுத்தர மக்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வாழ்வாதாரம் இழுந்து தவித்து வருகின்றனர். தமிழக மின்சாரவாரிய துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் வீடுகள், தொழில் நிறுவனங்களில் மின்சாரம் பயன்படுத்தியதற்கான அளவீட்டைக் கணக்கெடுக்கவில்லை. அதனால் முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்தைச் செலுத்துமாறு கூறியிருந்தது. அதனை ஏற்று மக்களும் கட்டியிருந்தனர், சிறு குறு தொழில் செய்பவர்கள் கடன் வாங்கி மின் இணைப்புக்கான கட்டணத்தைக் கட்டினர்.
 


இந்நிலையில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மின்வாரிய கணக்கீட்டாளர்கள் வீடுகள், கடைகளில் கணக்கெடுப்புக்கு வருகின்றனர். மின்சாரம் பயன்படுத்தியது தொடர்பாக மின்பயன்பாடு கணக்கிட்டுச் சென்றவர்கள், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை கணக்கிட்டு, இவ்வளவு தொகை கட்ட வேண்டும் எனத் தகவல் அனுப்பியுள்ளனர்.
 

இது பொதுமக்கள், வியாபாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 100 யூனிட்டுக்குள் இருந்தால் மின் கட்டணம் கிடையாது, 100 யூனிட்டை தாண்டினால் மின்கட்டணம் செலுத்த வேண்டும். 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 201 ஆவது யூனிட் என்றால் அதற்கு வேறு கட்டணம். இப்படிக் கட்டண வேறுபாடு உள்ளது.
 


தற்போது மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதம் பொருத்து வந்து மின் கணக்கீடு நடைபெறுவதால் பல வீடுகளில் 200 யூனிட்களை தாண்டி மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாகக் கட்டப்படும் கட்டணத்தை விட தற்போது மின்கட்டணம் உயர்ந்துள்ளது எனக் குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்களும், வியாபாரிகளும்.

அதேபோல் இறுதியாகச் செலுத்திய தொகையையே மீண்டும் செலுத்துங்கள் என மின்வாரியம் அறிவித்தது. அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின்சார கட்டணத்தை ஆயிரக்கணக்கான வீட்டினரும், வியாபார கடைக்காரர்களும் செலுத்தியுள்ளனர். மின்வாரியத்தில் செலுத்தப்பட்ட பணத்திற்கான யூனிட்டை கழிக்காமல் பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலான மின்சாரம் பயன்படுத்தப்பட்ட யூனிட்டுகளைக் கணக்கெடுத்து அதில் இருந்து மார்ச் மாதம் செலுத்திய மின்சாரம் கட்டனத்திற்கான யூனிட்டுகளைக் கழிக்காமல் பில் தொகை மட்டும் கழித்து கணக்கிடுவதால் வழக்கமாக செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

http://onelink.to/nknapp


தமிழக அரசு மற்றும் மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் செலுத்திய கட்டணத்திற்கான யூனிட்டுகளை கழித்து மீதமுள்ள யூனிட்டுக்கு மட்டுமே பணம் செலுத்த அறிவிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கின்றனர். மின்வாரியமோ இதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் அமைதியாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செல்போனுக்கு சார்ஜ் செய்த போது நேர்ந்த சோகம்; மாணவன் உயிரிழப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The tragedy happened while charging the cell phone; College student lose their live

ராமநாதபுரத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி கல்லூரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவன் அமுத கிருஷ்ணன். சம்பவத்தன்று அமுத கிருஷ்ணன் தன்னுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மாணவன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவனை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவன் அமுத கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மொபைல் போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

33 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத கிராம மக்கள்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Villagers without electricity for 33 years

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராம பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்

அந்த மனுவில், கீழ்வளையமாதேவி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வருவதால், சாலைகள் சேரும் சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில், கீழ் வளையமாதேவி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

எனவே இப்பகுதியில் வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ்வளையாமதேவி கிளை தலைவர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.