Skip to main content

லஞ்சம் தர முயன்ற மின்வாரிய பொறியாளர் கைது...

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Electrical engineer arrested for trying to bribe ...


விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் உள்ளது கீழ் எடையாளம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலச்சந்தர். இவருக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஏற்கனவே பாலச்சந்தர் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். அதிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்வதற்காக மின்சார வாரிய அதிகாரிகளிடம் இலவச மின் இணைப்பு கேட்டு 2001ஆம் ஆண்டு திண்டிவனம் மின்சார வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து இருந்தார். 

18 வருடங்களுக்குப் பிறகு பாலச்சந்தருக்கு தற்போது இலவச மின்சார மின் இணைப்பு வழங்க அரசு உத்தரவு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்தர் மிகவும் சந்தோஷத்துடன் உரிய ஆவணங்களுடன் மயிலத்திலுள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார். அங்கிருந்த உதவிப் பொறியாளரான புருஷோத்தமன் என்பவர், இலவச மின் இணைப்பு வழங்க வேண்டுமானால், தமக்கு 27 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் இலவச மின் இணைப்பு வழங்க முடியும் என பேரம் பேசியுள்ளார். 

 

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலச்சந்தர் இதுகுறித்து நேற்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாலசந்தரிடம் ரசாயன பொடி தடவிய பணத்தைக் கொடுத்து லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் புருஷோத்தமனிடம் அந்தப் பணத்தைக் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி நேற்று மாலை உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமனை செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்டு தாங்கள் கேட்ட லஞ்சப் பணம் கையில் உள்ளது, தங்களை எப்போது சந்தித்துக் கொடுக்கலாம் என்று கேட்டுள்ளார். 


அதற்கு புருஷோத்தமன், தான் இப்போது செண்டூரில் உள்ள மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வெளியே இருப்பதாகவும் அங்கு வந்து பணத்தைக் கொடுக்கும்படியும் கூறியுள்ளார். புருஷோத்தமன் அதன்படி விவசாயி பாலச்சந்தர் செண்டூரிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த புருஷோத்தமனிடம் லஞ்ச பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி யுவராஜ், இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் விஜய், தாஸ், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய டீம் புருஷோத்தமனை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக வளைத்துப் பிடித்தனர். 

 

Ad

 

பின்னர், அவரை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் நகராட்சியில் பணிபுரியும் நகர அமைப்பு விரிவாக்க அலுவலர் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தொடர்ந்து சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.