Skip to main content

விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

மார்ச்-1 ஆம் தேதி முதல் விழுப்புரத்தில் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Electric train between Villupuram - Mayiladuthurai

 

 

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விழுப்புரத்தில் காலை 5:55க்கு புறப்படும் 56873 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், மயிலாடுதுறையில் இருந்து காலை 5:40க்கு புறப்படும் 56874 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், விழுப்புரத்தில் பிற்பகல் 2:30க்கு புறப்படும் 56875 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3:45க்கு புறப்படும் 56876 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், விழுப்புரத்தில் மாலை 5:40க்கு புறப்படும் 56877 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:45க்கு புறப்படும் 56878 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், விழுப்புரத்தில் இருந்து மாலை 6:55க்கு புறப்படும் 56886 காட்பாடி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து அதிகாலை 4:55க்கு புறப்படும் 56881 விழுப்புரம் பயணிகள் ரயில் ஆகியவை மார்ச் 1ம் தேதி முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "இத்தனை ஆண்டுகளாக இந்த பாதைகளில் டீசல் எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. வண்டிகள் தொலைதூரத்தில் வருவதை சத்தத்தின் மூலம் அறியமுடியும். தற்போது மின்சாரம் மூலம் இயக்கப்படுவதால் அதிக சத்தம் இல்லாமல் ரயில் வண்டிகள் வரும். எனவே பொதுமக்கள் ரயில் பாதையின் அருகே செல்லும்போது கவனமாக பார்த்து செல்லவேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.