Skip to main content

டாக்டர்களை ஏமாற்றிய தேர்தல்!

Published on 25/05/2019 | Edited on 30/05/2019

 

பா.ம.க.வில் சாதாரண பொறுப்பு வகித்துப் பின்னர் வெளியேறிய அந்த நண்பர் அரசியலே வெறுத்துப்போய் ஒதுங்கிவிட்டார். அரசியல் விமர்சகரான அவர், டாக்டர்களை இந்தத் தேர்தல் ஏமாற்றியது குறித்தும்,  ‘தோல்வி கண்ட அரசியல் தலைவர்கள் திரும்பிப் பார்க்கவேண்டும்; சுயபரிசோதனை செய்ய வேண்டும்.’ என்றார் ஆதங்கத்துடன். அவரது பொதுவான கருத்துக்கள் இதோ-  

 

1989 நாடாளுமன்ற தேர்தல் முதல் பாமக தேர்தல் களத்தில் இருந்தாலும், அந்தக் கட்சியின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்குள் அடிஎடுத்து வைத்தது 1998 தேர்தலில்தான். அப்போது சிதம்பரம், தருமபுரி, வந்தவாசி, வேலூரில் வென்றது பாமக. மயிலாடுதுறையில் மட்டும் 2-ஆம் இடத்தை பிடித்தது.

 

The elections cheating  the doctors

ஓராண்டில் மீண்டும் தேர்தல் வந்ததால் 1999-ல் நடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 8 இடங்களில் போட்டியிட்டது. இதில் முந்தைய 4 தொகுதிகளோடு, ஏ.கே.மூர்த்தி  செங்கல்பட்டில் வென்றதால் பாமக எம்பிக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. 

 

2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, திண்டிவனம், தருமபுரி, அரக்கோணம், சிதம்பரம், செங்கல்பட்டு மட்டுமின்றி புதுச்சேரியிலும் வென்றதால் பாமக எம்.பிக்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. 2004-ஆம் ஆண்டில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

 

பின்னர் 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்ட பாமக அத்தனை இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. 

 

 

2014-ல்  பாஜக-தேமுதிக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுவையையும் சேர்த்து 9 இடங்களில் போட்டியிட்டது பாமக. இதில் தருமபுரியில் மட்டும் அன்புமணி வென்றார். 

The elections cheating  the doctors

 

தொடர் தோல்வியால் துவண்டு போன ராமதாஸ், இனி திராவிட கட்சிகளோடு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்று பேசி வந்தார். இதனால், 2016 சட்டமன்ற தேர்தலில் "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற புதுகோஷத்தோடு 230 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாமகவால். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், 5.4% வாக்குகளைப் பெற்றது.

 

 

கடந்த 20 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளையும் விமர்சித்த ராமதாஸ், அதிமுகவை மிகக் கடுமையாகவே விமர்சித்து  ‘கழகத்தின் கதை’ என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டார். ஜெயலலிதாவை மட்டுமல்ல, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என எல்லோரையும் வசைபடினார். அன்புமணி ஒருபடி மேலே போய், "எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் நிர்வாகம்னா என்னன்னு தெரியுமா? 2 பேரும் மானங்கெட்டவனுங்க, டயர் நக்கிகள்'' என்று வார்த்தைகளில் அமிலத்தைக் கரைத்து ஊற்றினார்.

 

 

ராமதாஸின் எதிரி யார் என்றால் அவரது போக்கும் நாக்கும் தான். கொண்ட கொள்கையில் மாற மாட்டேன் என்பதைப்போலவே அவரது பேச்சு இருக்கும். ஆனால், அவரது நடத்தை அதற்கு நேர்மாறாக இருக்கும். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அரசியலுக்கு வந்தால், முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்றார். ஆனால், மகனை 3-வது முறையாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இப்போது தருமபுரியில் நிறுத்தினார். ஒருவேளை தோல்வி கண்டால் ராஜ்யசபாவுக்கு அனுப்ப முன்கூட்டியே அதிமுகவிடம் அக்ரீமென்டும் போட்டுவிட்டார்.

 

 

இனியும் தனித்து நின்று பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த பாமக, இந்தத் தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டது. 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு 5.42% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதில் அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கூட்டணிக் கட்சிகளின் வாக்கும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

The elections cheating  the doctors

 

அதிமுகவை முந்தைய நாள் வரை விமர்சித்துவிட்டு, மறுநாள் கூட்டணி ஒப்பந்தம் போடும் போது, "கூட்டணியில் நாணல்; ஆனால் கொள்கையில் தேக்கு" என்றார். ஆனால் மக்கள் அளித்த வாக்கு பாமகவுக்கு எதிராக இருக்கிறது. 7 தொகுதிகளிலும் மாம்பழத்தை எதிர்த்து உதய சூரியன் தான் வென்றிருக்கிறது.

 

 

20 ஆண்டுகளாக திராவிட அரசியலை எதிர்ப்பது, பின்னர் தேர்தலுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மாற்றி அந்த கட்சிகளோடு கூட்டணி வைப்பது ராமதாஸின் நிலைப்பாடு. இதனால், மக்களிடையே ஒருவித அதிருப்தியே நிலவுகிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

 

 

எனவே, பாமக நிறுவனர் ராமதாஸ், "தாம் இதற்கு முன்னர் என்னவெல்லாம் பேசினோம். எப்படி எல்லாம் நடந்துகொண்டோம், மக்கள் நமக்கு என்ன அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டும். அதற்கான நேரம் இதுதான்!

கிருஷ்ணசாமிக்கு எட்டாக் கனியாகிப் போன எம்.பி பதவி!

 

The elections cheating  the doctors

 

1996-ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் டாக்டர் கிருஷ்ணசாமி. அதன்பிறகு புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கி, தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டாலும், 2006-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் 2014-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

 

இதுபோல், தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் களமும் கிருஷ்ணசாமிக்குப் புதிதல்ல. இதே தொகுதியில் அவர் ஆறு தடவை தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறார். இந்த முறை அதிமுக கூட்டணியில் களம் இறங்கினார். ஆனால், திமுக வேட்பாளர் தனுஷ்குமாரிடம் தோற்றுப் போனார். 

 

எப்படியாவது எம்.பியாகிவிட வேண்டும் என்ற கனவோடு, ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக அல்லது இதர கட்சிகளோடு கூட்டணி அமைத்து களம் இறங்கினாலும், கிருஷ்ணசாமிக்கு மிஞ்சுவது தோல்வியாகவே இருக்கிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.