Skip to main content

டாக்டர்களை ஏமாற்றிய தேர்தல்!

Published on 25/05/2019 | Edited on 30/05/2019

 

பா.ம.க.வில் சாதாரண பொறுப்பு வகித்துப் பின்னர் வெளியேறிய அந்த நண்பர் அரசியலே வெறுத்துப்போய் ஒதுங்கிவிட்டார். அரசியல் விமர்சகரான அவர், டாக்டர்களை இந்தத் தேர்தல் ஏமாற்றியது குறித்தும்,  ‘தோல்வி கண்ட அரசியல் தலைவர்கள் திரும்பிப் பார்க்கவேண்டும்; சுயபரிசோதனை செய்ய வேண்டும்.’ என்றார் ஆதங்கத்துடன். அவரது பொதுவான கருத்துக்கள் இதோ-  

 

1989 நாடாளுமன்ற தேர்தல் முதல் பாமக தேர்தல் களத்தில் இருந்தாலும், அந்தக் கட்சியின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்குள் அடிஎடுத்து வைத்தது 1998 தேர்தலில்தான். அப்போது சிதம்பரம், தருமபுரி, வந்தவாசி, வேலூரில் வென்றது பாமக. மயிலாடுதுறையில் மட்டும் 2-ஆம் இடத்தை பிடித்தது.

 

The elections cheating  the doctors

ஓராண்டில் மீண்டும் தேர்தல் வந்ததால் 1999-ல் நடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 8 இடங்களில் போட்டியிட்டது. இதில் முந்தைய 4 தொகுதிகளோடு, ஏ.கே.மூர்த்தி  செங்கல்பட்டில் வென்றதால் பாமக எம்பிக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. 

 

2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, திண்டிவனம், தருமபுரி, அரக்கோணம், சிதம்பரம், செங்கல்பட்டு மட்டுமின்றி புதுச்சேரியிலும் வென்றதால் பாமக எம்.பிக்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. 2004-ஆம் ஆண்டில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

 

பின்னர் 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்ட பாமக அத்தனை இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. 

 

 

2014-ல்  பாஜக-தேமுதிக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுவையையும் சேர்த்து 9 இடங்களில் போட்டியிட்டது பாமக. இதில் தருமபுரியில் மட்டும் அன்புமணி வென்றார். 

The elections cheating  the doctors

 

தொடர் தோல்வியால் துவண்டு போன ராமதாஸ், இனி திராவிட கட்சிகளோடு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்று பேசி வந்தார். இதனால், 2016 சட்டமன்ற தேர்தலில் "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற புதுகோஷத்தோடு 230 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாமகவால். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், 5.4% வாக்குகளைப் பெற்றது.

 

 

கடந்த 20 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளையும் விமர்சித்த ராமதாஸ், அதிமுகவை மிகக் கடுமையாகவே விமர்சித்து  ‘கழகத்தின் கதை’ என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டார். ஜெயலலிதாவை மட்டுமல்ல, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என எல்லோரையும் வசைபடினார். அன்புமணி ஒருபடி மேலே போய், "எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் நிர்வாகம்னா என்னன்னு தெரியுமா? 2 பேரும் மானங்கெட்டவனுங்க, டயர் நக்கிகள்'' என்று வார்த்தைகளில் அமிலத்தைக் கரைத்து ஊற்றினார்.

 

 

ராமதாஸின் எதிரி யார் என்றால் அவரது போக்கும் நாக்கும் தான். கொண்ட கொள்கையில் மாற மாட்டேன் என்பதைப்போலவே அவரது பேச்சு இருக்கும். ஆனால், அவரது நடத்தை அதற்கு நேர்மாறாக இருக்கும். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அரசியலுக்கு வந்தால், முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்றார். ஆனால், மகனை 3-வது முறையாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இப்போது தருமபுரியில் நிறுத்தினார். ஒருவேளை தோல்வி கண்டால் ராஜ்யசபாவுக்கு அனுப்ப முன்கூட்டியே அதிமுகவிடம் அக்ரீமென்டும் போட்டுவிட்டார்.

 

 

இனியும் தனித்து நின்று பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த பாமக, இந்தத் தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டது. 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு 5.42% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதில் அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கூட்டணிக் கட்சிகளின் வாக்கும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

The elections cheating  the doctors

 

அதிமுகவை முந்தைய நாள் வரை விமர்சித்துவிட்டு, மறுநாள் கூட்டணி ஒப்பந்தம் போடும் போது, "கூட்டணியில் நாணல்; ஆனால் கொள்கையில் தேக்கு" என்றார். ஆனால் மக்கள் அளித்த வாக்கு பாமகவுக்கு எதிராக இருக்கிறது. 7 தொகுதிகளிலும் மாம்பழத்தை எதிர்த்து உதய சூரியன் தான் வென்றிருக்கிறது.

 

 

20 ஆண்டுகளாக திராவிட அரசியலை எதிர்ப்பது, பின்னர் தேர்தலுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மாற்றி அந்த கட்சிகளோடு கூட்டணி வைப்பது ராமதாஸின் நிலைப்பாடு. இதனால், மக்களிடையே ஒருவித அதிருப்தியே நிலவுகிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

 

 

எனவே, பாமக நிறுவனர் ராமதாஸ், "தாம் இதற்கு முன்னர் என்னவெல்லாம் பேசினோம். எப்படி எல்லாம் நடந்துகொண்டோம், மக்கள் நமக்கு என்ன அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டும். அதற்கான நேரம் இதுதான்!

கிருஷ்ணசாமிக்கு எட்டாக் கனியாகிப் போன எம்.பி பதவி!

 

The elections cheating  the doctors

 

1996-ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் டாக்டர் கிருஷ்ணசாமி. அதன்பிறகு புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கி, தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டாலும், 2006-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் 2014-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

 

இதுபோல், தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் களமும் கிருஷ்ணசாமிக்குப் புதிதல்ல. இதே தொகுதியில் அவர் ஆறு தடவை தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறார். இந்த முறை அதிமுக கூட்டணியில் களம் இறங்கினார். ஆனால், திமுக வேட்பாளர் தனுஷ்குமாரிடம் தோற்றுப் போனார். 

 

எப்படியாவது எம்.பியாகிவிட வேண்டும் என்ற கனவோடு, ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக அல்லது இதர கட்சிகளோடு கூட்டணி அமைத்து களம் இறங்கினாலும், கிருஷ்ணசாமிக்கு மிஞ்சுவது தோல்வியாகவே இருக்கிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.