Advertisment

வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 3 கோடியே 21 லட்சம்!

‘வழக்கமாகக் கொண்டு செல்வதுதானே?’ என்று அந்த வாகனத்தில் ரூபாய் 3 கோடியே 21 லட்சத்தைக் கொண்டு சென்றனர். உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றதால், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisment

சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவிருப்பதால், தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 6 தேர்தல் பறக்கும்படையினர் வீதம் அமைத்து, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் 24 மணி நேர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று (17/03/2021) ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சோதனை மேற்கொண்டபோது, கனரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களில் பணம் வைப்பதற்காக வந்த வாகனத்தைச் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில், ரூபாய் 3 கோடியே 21 லட்ச ரூபாய், உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததால், பணத்தைப் பறிமுதல் செய்து, சீல் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Srivilliputhur money flying squad team tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe