Skip to main content

தேர்தலின்போது நடந்த கொள்ளை சம்பவம்..! பிடிபட்டவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..! 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Election robbery incident


2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது பணப்பட்டுவாடாவைக் கட்டுப்படுத்த பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் அச்சோதனைகளை மீறியும் பணம் கைமாற்றப்பட்டது. அதில், கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதி சோதனைச் சாவடியில் ஒரு காரில் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்ட பலகோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. 

 

இந்த விவகாரத்தில், இதுவரை 6க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சாமிரவி (42) என்பது தெரியவந்தது. 

 

ஆனால், சாமிரவி தலைமறைவாக இருந்துவந்தார். அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர் அருப்புகோட்டை பகுதியில் மறைந்திருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கே.கே.நகர் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைந்தனர்.

 

அதேபோல், தில்லைநகர், மணிகண்டம், ஜீயபுரம், கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இவர்மீது வழக்குகள் உள்ளதால், அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சாமிரவியை காவல்துறை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

Next Story

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Drivers suing to confirm suffrage .. High Court closes case ..!


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

 

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.