Skip to main content

ஓட்டுக் கேட்க எடப்பாடி செல்லும் சாலையும்.. ஓட்டு போடும் வாக்காளர் செல்லும் சாலையும்..      

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

 

    தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று கூட்டணி அமைத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது இல்லாமல் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனறு தனிக்கட்சிகளும், பலர் சுயேட்சைகளாகவும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மக்களே எஜமானர்கள் என்று அவர்களை தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பெரிய கட்சி தலைவர்கள் செல்லும் இடங்களுக்கு தலைக்கு ரூ. 200 கொடுத்து கூட்டத்தை கூட்டி இந்தப் படை போதுமா.. என்று எதிர் அணிகளுக்கு கேட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் அதே ஆட்களை தான் அழைத்துச் செல்கிறார்கள் என்பது ஓட்டுப் போடும் அந்த மக்களுக்கு நல்லாவே தெரிகிறது.

 

r

    

இந்த நிலையில் தான் முன்பு ஜெ. முதல்வராக இருந்த போது அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள சாலைகளை கண்ணாடி போல சீரமைப்பதும், வேகத்தடைகளை உடைத்து தடையில்லா சாலைகளை ஏற்படுத்துவதும் அவர் நின்று பேசும் இடத்தைச் சுற்றி சாலை ஓரங்களில் கிடக்கும் மண்ணை கூட்டி அள்ளுவதும் வழக்கம். ஆனால் எதிர்கட்சிகள் வழக்கமான சாலைகளையே பயன்படுத்த வேண்டும்.


    இப்படித் தான் தற்போதைய தேர்தலில் மாஜி முதல்வர் ஜெ. வை மிஞ்சும் அளவுக்கு தற்போதைய முதல்வர் எடப்பாடிக்காக நெடுஞ்சாலைத் துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி மட்டுமல்ல துணை முதல்வர் ஒ.பி.எஸ். செல்லும் சாலைகளும் அப்படித்தான்.

 

r


    இவர்கள் ஓட்டுக் கேட்டு வருவதற்கு முதல் நாளில் அவர்கள் பயணிக்கும் சாலையில் உள்ள சிறு சிறு பள்ளங்களும் சீரமைக்கப்படுவதுடன் சாலை ஓரங்களை பொக்கலின் வைத்து சமன் செய்து கிராவல் கொட்டி மேடு பள்ளங்கள் நிரப்பப்படுவதுடன்  வேகத்தடைகளும் அகற்றப்பட்டு வருகிறது. முதல்வர், துணை முதல்வர் கான்வாய்களில் செல்லும் போது குலுங்காமல் செல்ல தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள் நெடுஞ்சாலைப் பணியாளர்கள். இதற்காக சுமார் ரூ. 100 கோடி வரை தமிழகம் முழுவதும் செலவிடப்படும் என்று ரகசியத்தையும் உடைக்கிறார்கள். 


    ஓட்டுக் கேட்க வரும் இவர்கள் செல்லும் சாலை இப்படி பளபளக்கிறது என்றால் இவர்களை இந்த உயர்ந்த இடத்தில் அமர வைக்க ஓட்டுப் போட்ட மக்கள் எந்த மாதிரியான சாலையில் பயனிக்கிறார்கள் என்றால்.. அடிக்கடி விழுந்து செல்லும் மரண குழிகள் உள்ள சாலைகளில் தான் செல்கிறார்கள்.

 

r


    ஓட்டுப் போட்ட.. இனியும் ஓட்டுப் போட காத்திருக்கும் வாக்காளர்கள் சொல்வது.. ஒவ்வொரு முறை ஓட்டுக் கேட்க வரும் போதும் அரசியல்வாதிகள் சொல்வது இந்த கிராம சாலைகளையும் சீரமைத்து கொடுப்போம் என்று சொல்லிவிட்டு போவார்கள். அடுத்த தேர்தலுக்கும் வருவார்கள்.  அதே சாலையில் நின்று மறுபடியும் வாக்குறுதி கொடுப்பார்கள். இது தான் வழக்கம். ஆனால் நாங்கள் ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ, எம்.பி, முதல்வர் ஆனவங்க போறதுக்கு மட்டும் எந்த திட்ட மதிப்பீடும் இல்லாம அவசரமா நிதி ஒதுக்கி ரோடு போடுவாங்க. ஆனா காலங்காலமா நாங்க போற சாலையை சீரமைத்துக் கொடுங்கன்னு போராட்டம் கூட நடத்தினாலும் நிதி இல்லன்னு சொல்வாங்க. 


    இப்ப எடப்பாடி சுற்றுப்பயணம் செய்ற சாலைகள் எப்படி சீரமைக்கிறாங்க. அவருக்கு ஓட்டுப் போட்டு முதல்வர் ஆக்கின நாங்க போற சாலை எப்படி இருக்கு பாருங்க. ஒரே தொகுதியில் எடப்பாடி செல்லாத ஊர்களுக்கு போகும் சாலைகள் இன்னும் அதே நிலை தான். அதனால தமிழ்நாட்ல இருக்கிற எல்லா சாலைகளிலும் முதல்வர் ஓட்டுக் கேட்க வந்தால் எங்க ஊரு சாலைகளும் சீராகுமே என்கின்றனர் ஆதங்கமாக. 
            

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.