Advertisment

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, தேர்தலில் பணியாற்ற இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இன்று (03.04.2021) திருவல்லிக்கேணி எம்கேடி பள்ளியில் வாக்கு இயந்திரம் செயல்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.