Skip to main content

தேர்தல் அறிவிப்பு; மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

வாரம் தோறும் திங்கள் கிழமையன்று அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகள் அவர்கள் தொடர்பான அலுவலகங்களில் கண்டிப்பாக இருக்கவேண்டும். மக்கள் தரும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்படுகிற திங்கள் கிழமை குறைதீர் நாள் நடக்கும்.

 

meeting

 

குறிப்பாக நெல்லை கலெக்டர் அலுவலகம் மாவட்ட தலை நகரங்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் திங்கள் கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும். இதன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் முதல் அடித்தட்டு மக்கள் வரையிலானவர்கள் அன்றைய தினம் தங்களது குறைகளின் தீர்வுக்காக அலுவலகத்திற்கு திரளுவதுண்டு. திங்கள் கிழமை குறைதீர் கூட்டத்தால் நெல்லை கலெக்டர் அலுவலகம் பரபரக்கும்.

 

தற்போது பார்லிமெண்ட் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்து விட்டது. இதன் எதிரொலியாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்படுகிறது  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

meeting

 

இதே போன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில செவ்வாய் கிழமை தோறும் நடக்கும் குறை தீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

அதே சமயம், வழக்கம் போல் மக்கள் யாரேனும் குறை தீர்க்கிற மனுவுடன் வந்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரத்யேகமாக வைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டியில் மனுக்களைப் போட வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Electric trains canceled in Chennai

சென்னையில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சென்னையில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் -  சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.