Skip to main content

பிச்சை எடுத்தவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், சிகிச்சையும் வழங்க உத்தரவிட்ட  ஆட்சியர்...

Published on 01/06/2020 | Edited on 01/06/2020


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மாவட்டம் முழுவதும் எழும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 

கரோனா தொடங்கிய நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதை அறிந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. 
 


கொத்தமங்கலத்தில் 95 வயது முதியவர் தள்ளாத வயதிலும் பனைமரம் ஏறி நூங்கு வெட்டி இறக்கி விற்பனை செய்து வருகிறார். அவருக்கு மாதாந்திர முதயோர் உதவித் தொகை கிடைக்க நடவடக்கை எடுக்க மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மூலம் கோரிக்கை வைத்தோம். அடுத்த நாளே அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியரின் காரில் அழைத்து வரச் செய்து உதவித் தொகைக்கான உத்தரவை முதியவருக்கு வழங்கினார். இப்படி ஏழைகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை நகரில் ஒரு விழாவிற்குச் சென்றவர் விழா தொடங்க சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டதால் எதிரில் உள்ள திரு இருதய ஆண்டவர் தேவாலய வளாகத்திற்குள் சென்றார். அப்போது தேவாலய நுழைவாயிலில் 6 முதியவர்கள், மற்றும் மூதாட்டிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தவர், அவர்களிடம் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதனால் இனிமேல் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறியதுடன் அருகில் நின்ற அதிகாரிகளிடம் உடனே உதவித் தொகை கிடைக்க ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். 
 

 


அப்போது ஒரு மூதாட்டி எழுந்து நிற்க முடியாமல் உடல் நலமின்றி அமர்ந்திருப்பதைப் பார்த்து விசாரித்த ஆட்சியர் உமாமகேஸ்வரி, உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவுகளைப் பார்த்து நெகிழ்ந்த முதியவர்கள் கண்கள் கலங்க கைகூப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறினார்கள். கூடியிருந்த மக்களும் மாவட்ட ஆட்சியரை நன்றியோடு பார்த்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Boat ride canceled in Bichhiwara due to rain

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.