Skip to main content

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு போஸ்டர்;அதிர்ச்சியில் அதிமுக, பாஜக!!

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை அமைக்க மத்திய – மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையக்கப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருவாய்த்துறை முடித்துள்ளது. இந்நிலையில் பாமக உட்பட சில விவசாய அமைப்புகள் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்துள்ள நீதிமன்றம், விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி அதன்பின் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

 

 

அதன்படி இந்த 8 வழிச்சாலை செல்லவுள்ள மாவட்டங்களில் உள்ள நிலம் கையகப்படுத்தப்படும் தாலுக்காக்களில் தாசில்தார் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்துக்கொள்ளும் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த அதில் 80 சதவிதம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பே கிட்டுகிறது. அதிகாரிகள் விவசாயிகளை மிரட்ட அவர்கள் மறியல் போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

 

SS

 

இதற்கிடையே, நாடாளமன்ற பொதுத்தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் 5 மாவட்டங்கள், நூற்றுக்கும் அதிகமான கிராமங்களில் வாக்களிக்க மாட்டோம் என்கிற தலைப்பில், 8 வழிச்சாலைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் இவன் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் என்கிற பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

 

 

இதனை மத்திய – மாநில உளவுத்துறை போலிஸார் குறிப்பு எடுத்து மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த சாலையை ஆதரிப்பது மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு தான் என்பதால் அந்த கட்சி நிர்வாகிகளும் அதிர்ந்துப்போய் உள்ளனர். ஏற்கனவே பல காரணங்களால் மக்கள் அரசு மீது அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர். தற்போது இதுவேறா, இப்படியே போனால் மக்களிடம் ஓட்டு கேட்கவே போகமுடியாது போல என நொந்துப்போய் பேசுகின்றனர்.

 

 

 

இந்த போஸ்டர் ஒட்டியது யார் என அதில் உள்ள கைபேசி எண்களை வைத்து விசாரிக்கிறது உளவுத்துறை போலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.