Advertisment

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை திட்ட தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி..!

Eighth grade students to apply for the scholarship scheme qualifying examination registration will end tomorrow ..!

Advertisment

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான பயனாளிகள், தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நடப்புக் கல்வி ஆண்டுக்கான என்.எம்.எம்.எஸ். தகுதித்தேர்வு வரும் பிப்.21ஆம் தேதி நடக்கிறது. அனைத்து வட்டாரங்களிலும் இத்தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜன.8ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை ஜன.12ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பணிகள் நடந்து வந்தன.

Advertisment

இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி, என்.எம்.எம்.எஸ். திட்ட தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜன. 20) வரை அவகாசம் நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

scholarship
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe