Skip to main content

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கில் எட்டு பேர் கைது! 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Eight arrested in businessman  case

 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்த முகமது நிஜாம்(52), ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பீவி இவர்களுக்கு ராஜாமுகமது, சேக் அப்துல்காதர், பர்கானா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள் பர்கானாவிற்கு திருமணமான நிலையில் மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வந்துள்ளனர். முகமது நிஜாம் மற்றும் அவரது மனைவி ஆயிஷா பீவி இருவரும் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ந் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசவில் தொழுகையை முடித்துவிட்டு, வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து முகமது நிஜாம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் முகமது நிஜாமின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

 

Eight arrested in businessman  case

 

அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, இரத்தக்கரையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர். உயிர் பயத்திலிருந்த ஆயிஷாபீவி பீரோ சாவியை கொடுத்துள்ளார். சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 170 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.


 
கை கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவி மெல்ல நகர்ந்து சென்று  செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்து பார்த்த உறவினர்கள் முகமது நிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டிற்குள் கட்டிக்கிடந்த ஆயிஷாபீவியை காப்பாற்றியுள்ளனர்.

 
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்தீபன் சம்பவ இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்க உத்தரவிட்டார். டி.எஸ்.பிகள் மனோகரன், அருள்மொழி அரசு, சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து சம்பவ இடத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி சரவணசுந்தர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்துவிட்டு 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

Eight arrested in businessman  case

 

தனிப்படை போலீசார் தொடர்ந்து நடத்திய புலன் விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் அவர்களிடம் இருந்து 62 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், செல்போன்கள், கத்தி, கையுறைகளை கைப்பற்றியுள்ளனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.