Skip to main content

மாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு! கடலூரில் பதற்றம்

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள எய்தனூர் எனும் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாம்பழம் சின்னம் வரையப்பட்டுள்ளது. அந்த வீடுகளில்  அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளனர்.  

 

b

 

முதலில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள்  பேட்ரோல் குண்டு வீசியதில் அப்பகுதி தீப்பற்றி எரிந்தது. மேலும்  அருகிலிருந்த சீதாராமன் என்பவரது வீட்டிலும்  பெட்ரோல் வெடிகுண்டை வீசி உள்ளனர்.  ஆனால் அந்த குண்டு வெடிக்கவில்லை.  அதனால் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த  காரை எரிக்க முயன்றுள்ளனர்.  

 

அதேசமயம் பெட்ரோல் குண்டு வீசிய சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்க்கவே அந்த மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.  மாம்பழம் சின்னம் வரையப்பட்டுள்ள  அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதால் இது தேர்தல் முன் விரோதமாக இருக்குமோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்று நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

b

 

அதேபோல் விருத்தாசலத்தில் மாற்று சமூகத்தை இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிறுத்தை சிவகுமார் என்பவரை விருத்தாசலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

இந்நிலையில் மாவட்டத்தில் இதுபோன்ற சமூகப் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக  நேற்று கடலூர் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன.  இதனால் குடிவெறியர்கள் மது கிடைக்காமல் அல்லாடினர்.

 

இதுபோன்ற சம்பவங்களால்  கடலூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் முதலில் முந்துவது என போட்டி - பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

school vans incident students cuddalore district



பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும் முயற்சியில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு அப்பள்ளியைச் சேர்ந்த இரு வேன்கள் போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 25 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி கோ.ஆதனூர் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.