இறைவனின் தூதுவரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்றுசிறப்புத் தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்துதங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். சென்னை மட்டுமல்லாது உலகப் புகழ்பெற்ற நாகை நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். அதேபோல் நாகை, திட்டச்சேரி, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.