தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்றால் சென்னையின் கோயம்பேடு பேருந்துநிலையம், சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த முறை கரோனா தொற்று காரணமாக ஐ.டி.நிறுவனங்களில் பணிப் புரிவோர் வீட்டில் இருந்தே பணிப் புரிந்துவருவதால் பெரும்பாலானோர் அவர் அவர் சொந்த ஊர்களிலே இருக்கின்றனர்.
இந்த காரணத்தினால், தீபாவளி பண்டிகைக்காக சென்னைலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் மூலம் செல்லும் மக்கள் குறைவாக காணப்பட்டதால் எழும்பூர் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.